விஎல்பி கல்லூரியின் சார்பில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான "விவயுவ- 2017" போட்டிகள் இன்று துவக்கம்


கோவையில், விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் "விவயுவ- 2017" என்னும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு இன்று துவக்க விழா கொண்டாடப்பட்டது.



இதில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மின்னணுவியல் துறை சார்பாக ஒரு மாபெரும் கண்காட்சியும் நிகழ்த்தப்படவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளிலும் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் துவக்க விழாவில் கோவை தி ஹிந்து நாளிதழின் முன்னாள் நிருபர் அமுதாகண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆங்கிலம் என்பது ஒரு பாடம் அல்ல. அது ஒரு மொழி என்றும், தகவல் தொடர்பிற்கு மொழியின் அவசியம் குறித்தும் சமுதாயத்தில் தன்னை ஒரு வரலாறாய் பதிவு செய்வதற்கு மொழியும், எழுத்துப்பணியும் அவசியம் என்றும், மாணவர்களிடையே எழுத்துப் படைப்பாற்றல் வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் ஆங்கில மொழியில் தன்னளவில் மேம்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மாணவர்களிடையே கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி உற்சாகப்படுத்தினார்.



இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் ஜெயஸ்ரீசந்தோஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ந.ராஜ்குமார் தலைமையுரை வழங்கினார். இளங்கலை இயக்குநர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.

நிறைவு விழாவில், கோவைபுதூர் சாந்தி ஆஷ்ரமத்தின் இயக்குநர் வினுஅறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.1 லட்சம் ரொக்க பணத்தினை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக பேராசிரியை ஜாய்சுகன்யா நன்றியுரை வழங்கினார். மின்னணுவியல் துறை கண்காட்சி, துறைத் தலைவர் வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...