கோவையில், விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் "விவயுவ- 2017" என்னும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு இன்று துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இதில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மின்னணுவியல் துறை சார்பாக ஒரு மாபெரும் கண்காட்சியும் நிகழ்த்தப்படவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளிலும் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் துவக்க விழாவில் கோவை தி ஹிந்து நாளிதழின் முன்னாள் நிருபர் அமுதாகண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆங்கிலம் என்பது ஒரு பாடம் அல்ல. அது ஒரு மொழி என்றும், தகவல் தொடர்பிற்கு மொழியின் அவசியம் குறித்தும் சமுதாயத்தில் தன்னை ஒரு வரலாறாய் பதிவு செய்வதற்கு மொழியும், எழுத்துப்பணியும் அவசியம் என்றும், மாணவர்களிடையே எழுத்துப் படைப்பாற்றல் வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்கள் ஆங்கில மொழியில் தன்னளவில் மேம்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மாணவர்களிடையே கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் ஜெயஸ்ரீசந்தோஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ந.ராஜ்குமார் தலைமையுரை வழங்கினார். இளங்கலை இயக்குநர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.
நிறைவு விழாவில், கோவைபுதூர் சாந்தி ஆஷ்ரமத்தின் இயக்குநர் வினுஅறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.1 லட்சம் ரொக்க பணத்தினை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.
நிகழ்வின் நிறைவாக பேராசிரியை ஜாய்சுகன்யா நன்றியுரை வழங்கினார். மின்னணுவியல் துறை கண்காட்சி, துறைத் தலைவர் வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.
